திருச்சியில் கள்ளத்தனமாக மது விற்ற பிரபல ரவுடி கைது - 100 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சியில் கள்ளத்தனமாக மது விற்ற பிரபல ரவுடி கைது - 100 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கீரமங்கலத்தை சேர்ந்த பிரபல மான் கராத்தே ரவுடி, கட்டப்பஞ்சாயத்து சிங்கம் என்ற அழைக்கப்படும் சரண் என்கிற சரண்ராஜ் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO