பாசன வாய்க்காலில் தண்ணீர் விட கோரி விவசாயிகள் மனு

பாசன வாய்க்காலில் தண்ணீர் விட கோரி விவசாயிகள் மனு

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதி விவசாய சங்கத்தினர் தங்கள் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஆண்டு பயிரான வாழை, வெற்றிலை, பயிர்களுக்கு மெயின் வாய்க்கால், சின்னவாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரி தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியிடம் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

 மேலும் ஒரு வார காலத்திற்குள் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காவிட்டால் 10- ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டியம் பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி மிக பிரம்மாண்டமான சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் தொட்டியம் வட்ட வாழை வெற்றிலை விவசாய சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்ட வாலை வெற்றிலை விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொ ண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision