பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் - விவசாயிகள் கவலை

பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் - விவசாயிகள் கவலை

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள ஆத்தூர் ரோட்டில் சத்யநாராயணன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது தனலட்சுமி நகர் இந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது இப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து குப்பைகளில் கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்காக இங்கு பன்றிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் வெளியே வருவதற்கும் பள்ளிகூடம் செல்லும் குழந்தைகள் அச்சபடுவதாகவும் இங்கு குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் துறையூரை சுற்றியுள்ள வெங்கடேசபுரம் துறையூர் ஆகிய பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 சம்பந்தப்பட்ட பன்றி உரிமையாளர்கள் பன்றிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் தங்கள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision