அரசு பள்ளி வகுப்பறையில் புகுந்த சாரைப்பாம்பு - லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

அரசு பள்ளி வகுப்பறையில் புகுந்த சாரைப்பாம்பு - லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரையிலும் உள்ளது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் வகுப்பறை நடந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்ததில் பள்ளி மாணவர்கள் அலரி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதனை கண்ட ஆசிரியர்கள் லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் லால்குடி தீயணைப்பு முத்துகிருஷ்ணன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களோடு 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை பத்திரமாக பிடித்து தச்சங்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn