17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடித் திருவிழா பெரிய மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்த மீன்பிடி ஆர்வலர்கள்

17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடித் திருவிழா பெரிய மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்த மீன்பிடி ஆர்வலர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் புங்கம்;குளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் புங்கம்குளத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில் அதில் அதிக அளவில் மீன்களும் துள்ளி விளையாடின.

இந்நிலையில் தற்போது நீர் இருப்பு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி காலை வேங்கைக்குறிச்சி ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை வீசி விழாவை தொடங்கி வைக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் துவங்கினர். மீன் பிடி வலைகளுடனும் மீன் பிடிக்க சிலர் கொசுவலை, மூங்கில் கூடை, சேலை மற்றும் நைலான் பைகளையை பயன்படுத்தியும் மீன்களை பிடித்தனர். கெண்டை, மீசை கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் அனைவருக்கும் சிக்கியது.

அனைவருக்கும் மீன்கள் சிக்கியதால் மீன்பிடி ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதில் மக்களுக்கு சிக்கிய மீன்களில் பொரும்பாலானவை சுமார் 2 கிலோவிற்கு மேல் தான். 7 கிலோ எடை வரை இருந்தது. இதனால் ஒரு மீன் சிக்கினாலும் போதும் என்று நிம்மதியாக மீன்களை மகிழ்ச்சியோடு பிடித்து சென்றனர். மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO