காய்கறி விவசாயிகளுக்கான உணவு கலப்பட விழிப்புணர்வு முகாம்

காய்கறி விவசாயிகளுக்கான உணவு கலப்பட விழிப்புணர்வு முகாம்

திங்கள்கிழமை திருச்சி உழவர் சந்தை பகுதியில் உள்ள விவசாய மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின்படி நேற்று  சற்றே குறைப்போம் திட்டம், உணவு கலப்பட விழிப்புணர்வு முகாம் மற்றும் FOSTAC பயிற்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குறைந்த சர்க்கரை, குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு குறைந்த அளவில் உண்ணவேண்டும் என்றும், காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள் கெட்டுப்போன காய்கறிகளையோ, ரசாயனம் கலந்த காய்கறிகளையோ விற்பனை செய்யக்கூடாது என்றும் பொதுமக்களும் காய்கறிகளை வாங்கும்போது பார்த்துவாங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் விவசாய அதிகாரி அனுராதா அவர்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் Dr.R .ரமேஷ்பாபு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செய்திருந்தனர்.இந்த கூட்டத்தில் சுமார் 72 விவசாய வணிகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO