முன்னாள் எம்.பியின் மகனை திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் - அமைச்சரிடம் மனு

முன்னாள் எம்.பியின் மகனை திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் - அமைச்சரிடம் மனு

மறைந்த முன்னாள் எம்.பி. அடைக்கல்ராஜின் மகனும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜை திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேருவை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் விக்டர், கோட்ட தலைவர்கள் கஸ்பார், ஜெரால்டு, வார்டு தலைவர் நடராஜ், உறையூர் சிவா, கருமண்டபம் மரியசூடு, ரோஜர், காங்கிரஸ் மனிதஉரிமைத் துறை முன்னாள் தலைவர் புத்தூர் ஏ.எஸ்.சார்லஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision