10 நாட்களில் ஸம்ஸ்க்ருத இலவச பயிற்சி வகுப்பு

10 நாட்களில் ஸம்ஸ்க்ருத இலவச பயிற்சி வகுப்பு

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வெளிக்கொண்டு வரவும் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேருகின்றனர். இவர்களுக்கு பெற்றோர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஸம்ஸ்க்ருத பாரதி சார்பில் 10 நாட்களில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜாதி மத வயது வரம்பின்றி அனைவருக்கும் கற்றுத் தரப்படுகிறது. சரளமாக சமஸ்கிருதம் பேச இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மே 8ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் நேரடி 10 நாள் இலவச பேச்சு பயிற்சி வகுப்பில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கலந்து கொள்ளலாம். இவ்வகுப்பில் கலந்து கொள்ள சமஸ்கிருத மொழியில் முன்பே அறிந்திருக்க வேண்டியதில்லை. இவ்வகுப்பு எந்தவித கட்டணங்களுமின்றி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரம் மற்றும் தொடர்புக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision