திருச்சியில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

திருச்சியில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

ஊர்கள் தோறும் தி.மு.க .100 வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுக வின் சார்பாக பெரிய கடை வீதி தைலா சில்க்ஸ் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கழக இரு வர்ண கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கழக மூத்த முன்னோடிகள் 100 நபர்களுக்கு பொற்கிளியை வழங்கி சமர்ப்பித்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் கே.என்.சேகரன், சபியுல்லா, செந்தில், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் நகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision\