டெல்லி விவசாயிகள் பேரணி கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு!!

டெல்லி விவசாயிகள் பேரணி கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு!!

Adivertisement

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாக குழு ,மாவட்ட செயலாளா்கள் கூட்டம் திருச்சி பொிய மிளகு பாறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

Advertisement

மாநில பொது செயலாளா் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் நண்பகல் விவசாயிகள் பேரணியில் கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் அவர்களின் தூண்டுதலின் பேரில் தீவிரவாதிகள் இதனை செய்ததாகவும் அதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

மேலும் இதற்கு ஆதரவாக டெல்டா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு கண்டிக்கிறோம். டெல்டா மாவட்டங்களில் பெரு மழையால் சேதமடைந்த பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.  மாநில தலைவா்கள், மாவட்ட செயலாளா்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

Advertisement