ஒரே இரவில் அடுத்தடுத்த தெருவில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து கைவரிசை - திருச்சி அருகே பரபரப்பு!!

ஒரே இரவில் அடுத்தடுத்த தெருவில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து கைவரிசை - திருச்சி அருகே பரபரப்பு!!

Advertisement

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனாபுரம் கிராமத்தில் அடுத்தடுத்த தெருக்களில் உள்ள இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து 13 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சோபனாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயியான ரமேஷ் இவர் உடல்நிலை சரியில்லாததால் திருச்சி தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் இவரது மனைவி உதவிக்காக தங்கியுள்ளார். 

மகள் தனியாக இருந்ததால் பக்கத்தில் உள்ள சித்தி வீட்டில் நேற்று இரவு தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் ரமேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளே இருந்த 12 சவரன் தங்க நகைகள்  97 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதே போல் அருகில் உள்ள முத்து கங்கானி தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரது வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

Advertisement

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்த தெருக்களில் உள்ள இரண்டு வீடுகளில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement