தேர்தல் நடத்தை விதிகள் அமல் - திருச்சி பெட்ரோல் பங்குகளில் மோடியின் புகைப்படங்கள் மறைப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - திருச்சி பெட்ரோல் பங்குகளில் மோடியின் புகைப்படங்கள் மறைப்பு

Advertisement

பெட்ரோல் பங்குகளில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும் பேனர்கள், பிரதமர் மோடியின் புகைப்படத்தோடு இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்குகளிலிருந்து, மோடியின் படங்கள் அடங்கிய பேனர்களை, 72 மணிநேரத்தில் நீக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மோடியின் புகைப்படங்கள், பேனர்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளது.