டீ மாஸ்டரான திருச்சி திமுக வேட்பாளர்

டீ மாஸ்டரான திருச்சி திமுக வேட்பாளர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை தீவிர கட்டத்தை எட்டியுள்ளது ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வார்டு வாக்காளர்களை கவர வெவ்வேறுவிதமான நூதன முறையில் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி 16வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் மதிவாணன்  வரகனேரி, மந்தை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதியில் இருந்த தேநீர் கடைக்கு
சென்று டீ மாஸ்டரானார்.

பின்பு டீ போட்டு கடையில் உள்ளவர்களுக்கும் வாக்காளர்களுக்கும் கொடுத்து அவர்களுடன் தேனீர் அருந்தி கொண்டு வாக்குகள் சேகரித்தார். இதேபோல் அப்பகுதியில் இன்னொரு இடத்தில் சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டியில் இட்லி மாவை ஊற்றி வேகவைத்து வாக்காளர்களை கவர்ந்தார். வயதான மூதாட்டியிடம் கலந்துரையாடியும்
வாக்கு சேகரித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn