திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக 50 பேருக்கு மளிகை தொகுப்புகள்!!

திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக 50 பேருக்கு மளிகை தொகுப்புகள்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் உதவும் மனப்பான்மையும் பலரும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ஐம்பது ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் எல்‌. ரெக்ஸ் கலந்துகொண்டு மளிகை தொகுப்பினை வழங்கினார். திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ், பொது செயலாளர் அஞ்சு, செயலாளர் விஜயலக்ஷ்மி, கோகிலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.