மனுநீதி நாள் முகாம்  நிறைவு விழா

மனுநீதி நாள் முகாம்  நிறைவு விழா

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் குவளக்குடி கிராமத்தில் இன்று (31.01.2023) நடைபெற்ற  சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு 283 பயனாளிகளுக்கு ரூபாய் 58.50 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர்தவச்செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், வட்டாட்சியர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் அழகு கே செந்தில், அரசு துறை உயர் அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn