தவெக தலைவர் அழைத்தால் கட்சியில் சேருவேன் திருச்சியில் அமீர் பேட்டி

தவெக தலைவர்  அழைத்தால் கட்சியில் சேருவேன் திருச்சியில் அமீர் பேட்டி

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்னை அழைத்தால் அவரது கட்சியில் சேர தயாராக உள்ளேன் - இயக்குனர் அமீர் பேட்டி .

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகரும் இயக்குனருமான அமீர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் - அப்போது பேசிய அவர் :

அரசியலுக்கு அமீர் வருவாரா என்கிற கேள்விக்கு நிச்சயமாக வருவேன் இன்று இருக்கும் அரசியல் நெருக்கடியின் காரணமாக அரசியலுக்கும் வந்தாலும் வருவேன் என்று பதில் அளித்தார்.

எல்லோரும் அரசியலில் தான் உள்ளோம் - திராவிடம் என்கிற சொல்லை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திராவிடம் என்கிற உணர்வு நமது ரத்தத்திலேயே இருக்கிறது - யாரெல்லாம் பாசிசத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கொள்கை கொண்டு செயல்படுகிறார்களே அவர்கள் அனைவரும் திராவிட அரசியல் செய்பவர்கள் தான் - எனவே திராவிடம் என்கிற பெயரை தாங்கிய கட்சி தான் அதனை செய்கிறார்கள் என்று அல்ல - பாசிசத்திற்கும் ஆரியத்துக்கும் எதிரானது தான் திராவிடம்,அது தான் திராவிடத்தின் அடையாளம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தை பொறுத்தவரை சட்ட ஒழுங்கை சரி செய்து கொண்டு தான் உள்ளனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்னை அழைத்தால் அவரது கட்சியில் சேர தயாராக உள்ளேன் விஜய் சீமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்..

மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தை நிராகரித்திருப்பது குறித்த கேள்விக்கு : 

இதுதான் ஒன்றிய அரசின் முகம் - 

நிராகரித்திருப்பது என்பது கூட பெரிதல்ல ஆனால் அதற்கும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை என்னும் போது தான்  வருத்தமாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision