திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்,  அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம், கொட்டப்பட்டு, சோழமாதேவி, எல்லக்குடி உள்ளிட்ட அறுபது இடங்களில் இன்று கருப்பையா வாக்கு சேகரித்தார்.

முன்னதாக சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கஜசாந்த யோகீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை துவக்கினார்.அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையாவுக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

பிரச்சாரத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் இருசக்கர வாகனத்தை இயக்க ... பின்னால் அமர்ந்தபடி சென்ற வேட்பாளர் கருப்பையா தெருத்தெருவாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision