திருச்சியில் எஸ்ஆர்எம் கிராம சுகாதார மையம் துவக்க விழா

திருச்சியில் எஸ்ஆர்எம் கிராம சுகாதார மையம் துவக்க விழா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் எஸ்ஆர்எம் மருத்துவக் குழுமத்தின் சார்பில் கிராம புற சுகாதார மையம் துவக்க விழா நடைபெற்றது. கிராம புற சுகாதார மையத்தினை சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பொன்னுசாமி திறந்து வைத்து பேசியதாவது.

எஸ்ஆர்எம் மருத்துவக்குழுமம் மருத்துவ சேவையில் அளப்பரிய சேவையினை செய்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரைஸ் தொற்று காலக் கட்டத்தில் குறைந்த செலவில் அதிக மானவர்களுக்கு சிகிச்சை செய்துள்ளோம். மருத்துவ சேவை நகர பகுதிகளுக்கு மட்டுமல்லாது கிராமப்புற மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நோக்கில் தான் இந்த பகுதியில் சுகாதார மையத்தினை துவக்கிவுள்ளோம் என்றார் அவர்.
 

எஸ்ஆர்எம் கல்விக்குழு திருச்சி மற்றும் ராமாபுரம் தலைவர் டாக்டர் சிவக்குமார் மற்றும் திருச்சி எஸ்ஆர்எம் ஐஎஸ்டி தலைவர் நிரஞ்சன் ஆகியோர் வாழ்த்துதலுடன் நடைபெற்ற இவ் விழாவில் செயல் இயக்குநர் டாக்டர் ரகுபதி, இணை இயக்குநர் டாக்டர் என். பாலசுப்ரமணியன், திருமங்கலம், திருமணமேடு, கீழப்பெருங்காலூர் ஆகிய  ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராம பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

       

இவ்விழாவில் மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி வரவேற்றார். சுகாதார மைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn