திருச்சியில் ஒரு மணி நேரமாக சூறாவளிகாற்று, இடியுடன் கனமழை

திருச்சியில் ஒரு மணி நேரமாக சூறாவளிகாற்று, இடியுடன் கனமழை

திருச்சி மாநகரில்  சூறாவளி காற்றுடன் கன மழை பெய்கிறது.பலத்த  சூறாவளி காற்றுடன் ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கோவிட் தொற்றால் குறைந்த அளவே பயணிகள் ரயில் பயணம் செய்து வருகின்றனர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் பெய்த கன மழையினால் அங்கு வந்திருந்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில் நிலையம் பிரதான வாயில்  மற்றும் முதல் நடைமேடை நடைமேடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது . ஒரு மணி நேரமாக கனமழை திருச்சி மாநகரில் பெய்து வருகிறது தாழ்வான பகுதிகளில் மழைநீர்  சூழ்ந்துள்ளது.

இதேபோல் ஸ்ரீரங்கம் பகுதியிலும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்கிறது .கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களுக்கு அதே போல் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது .இந்நிலையில் இந்த கனமழை   திருச்சி மக்களுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியை தந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK