ஓரே DNT சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி அமைச்சர் அலுவலகம் ‌முன்பு காத்திருப்பு போராட்டம்!!

ஓரே DNT சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி அமைச்சர் அலுவலகம் ‌முன்பு காத்திருப்பு போராட்டம்!!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் DNT(சீர்மரபினர்) சமூகத்தினர் திருச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீரங்கம் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

 DNT(De-Notified Tribes) ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும், DNT மக்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட DNT ஒன்றிணைந்து திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பல சாலை பகுதியில் உள்ள (MLA Office) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a