திருச்சி அரசு மருத்துவமனைக்கு 67000 ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 67000 ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு தன்னார்வ அமைப்பினரும், பல நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 100 முகக்ககவசம் மற்றும் 50 ஆக்சிஜன் மாஸ்க் ஆகியவற்றை மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் வனிதாவிடம் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

இதனை போன்றே 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆக்சிஜன் ஃப்ளோ (Oxygen flow meters ) மீட்டர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் குறிப்பாக மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்

நோயாளிகளுக்கு உதவும் வகையில் லாட்ஜ் திருச்சிராப்பள்ளி நம்பர் 203 உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார்  சார்பாக  நேற்றைய தினம் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் வனிதாவிடம் நேரில் சந்தித்து வழங்கி உள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK