டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் - சீமான் தரப்பு வழக்குரைஞர்

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் - சீமான் தரப்பு வழக்குரைஞர்

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு உகந்ததல்ல அதை தள்ளுபடி செய்ய வேண்டும் - சீமான் தரப்பு வழக்குரைஞர்கள் வாதம்.வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து வரும் ஜீன் மாதம் 4 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் - நீதிபதி உத்தரவு

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்பு நடைபெற்று வருகிறது. வருண் குமார் தரப்பில் ஏற்கனவே அவருடைய வாதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சீமான் தரப்பில் அவருடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்து இருந்தார்.அதன்படி சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் அவருடைய வாதங்களை நீதிபதி விஜயா முன்பு எடுத்து வைத்தார்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக சீமான் தரப்பு விளக்கம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 

எழும்பூரில் நிகழ்வு ஒன்றில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலே சீமான் வருண் குமாரை பற்றி பேசினார். எழும்பூரில் பேசியதற்கு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல.

சம்மந்தப்பட்டவர் எங்கு பேசினாரோ அந்த நீதிமன்ற வரம்புக்குள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த வழக்கை விசாரிக்காமல் நீதிபதி அவர்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.மேலும் டிஐஜி வருண் குமார் தன்னுடைய நற்பெயர்க்கு கலங்கம் விளைவித்ததாக கூறியுள்ளார் 2015 ஆம் ஆண்டு அவர் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் 20 நாட்கள் சிறையில் இருந்தவர் வருண்குமார்.

 அவருக்கு எப்படி நற்பெயர் இருக்கும் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று சமாதானம் பேசி முடித்தவர் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.எனவே இந்த வழக்கு முழுக்க முழுக்க சீமான் அவர்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் வருண் குமார் அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வழக்கை பதிவு செய்துள்ளார் அதனால் நீதிபதி அவர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

 இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி அவர்கள் விஜயா வரும் ஜூன் மாதம் நான்காம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் அன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து நீதிபதி உத்தரவிடுவார்.இது குறித்து பேசிய சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர்,டி ஐ ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதியிடம் எங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளோம் எங்கள் தரப்பு வாதம் முழுவதையும் நீதிபதி கேட்டுள்ளார். இதுகுறித்து அடுத்து வழக்கு விசாரணைக்கு வரும்பொழுது நீதிபதி முடிவு எடுப்பார். 

சீமான் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியதாக பரவும் தகவல்கள் தவறானது ஒரு முறை மட்டுமே சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார் அதன்படி நீதிமன்ற உத்தரவை மதித்து சீமான் நேரில் ஆஜராகினார் மீண்டும் மீண்டும் அவர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

சீமான் பேசியது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என கூறுவது தவறு அவதூறு வழக்கை எங்கு வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என கூறினார்.சீமானுக்கு எதிராக திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை தற்பொழுது சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் நான்காம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision