திருச்சியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது - மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் அவதி

திருச்சியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது - மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் அவதி

கரூர் பகுதியில் பெய்த மழை மற்றும் குளித்தலை பகுதியில் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பு இவற்றால் உய்யகொண்டான் வாய்க்காலில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. திருச்சி குழுமாயி அம்மன் தொட்டி பாலம் அருகில் மழை நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

 இதனால் கரையோர பகுதிகளாக உள்ள வயலூர் ரோடு கணபதி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது .மேலும் அப்பகுதியில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதேபோல் திருச்சி குழுமணி சாலையில் உள்ள லிங்க நகர் ,செல்வ நகர் ,அரவிந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து விட்டது .

அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக எடுத்து வந்து பிரதான சாலையில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து இப்பகுதியில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே உள்ளனர்.

 ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் சிவராசு கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn