திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

குழுமாயி அம்மன் கோவில் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் அதனை வேடிக்கை பார்ப்பதற்காக, ஆபத்தை உணராமல் அப்பகுதிக்கு மக்கள் அதிக அளவில் வரும் நிலையில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகிலுள்ள குமரன் நகர், உறையூர்,லிங்க நகர்,செல்வ நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இப்பகுதியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையர் மாநகராட்சி ஆணையர், திமுகவை சேர்ந்த அன்பழகன், வைரமணி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மெற்கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn