25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கைவிரிப்பு! தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கைவிரிப்பு! தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தரவேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. என்ற காரணத்தை முன்னிறுத்தி RTE  படி 25 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை உடனடியாக தலையிட்டு கட்டாய கல்வி உரிமை சட்டம் சட்டப்படி 25% இட ஒதுக்கீட்டை உத்திரவாதப்படுத்த வேண்டும். சர்வ சிக்க்ஷா அபியான் SSA திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய ரூபாய் 2000 கோடிக்கு மேலான நிதி பங்கிட்டை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்து வருகிறது.இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 7 லட்சம் மாணவர்களுக்கு மேலாக கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை இருக்கிறது.

இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர்.சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதளத்தை முடக்கி வைத்திருக்கின்றனர் எனவே தமிழக அரசு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிதியினை வழங்க RTI முழுமையாக மாணவர் சேர்க்கை விதத்திற்காக முயற்சிகளை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகிகள் 77% மாணவரிடம் கட்டணத்தை வசூலிக்கும் நிலையில் அரசு நிதி தாமதமாவதை காரணம் காட்டி 25% மாணவர் சேர்க்கை மறுப்பது நியாயம் அல்ல.

என்பது சுட்டிக்காட்டப்படுகிறோம் ஒன்றிய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முடமாக்கும் வகையில்  சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் தனியார் பள்ளி நிர்வாகம் பாதிப்பை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வி வாய்ப்பை மறுக்கும் வகையில் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஒன்றிய அரசிடமிருந்து நிதியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும். அந்நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் RTI சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்  மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision