அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு - மாடு முட்டி ஒருவர் பலி!!

அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு - மாடு முட்டி ஒருவர் பலி!!

விராலிமலை அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாடு முட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி உயிரிழந்தார்.

Advertisement

விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் பிடாரி அம்மன் கோயிலில் கடந்த 14 ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி கோயில் மாடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.

Advertisement

இதில் மாடுகளை அடக்க முயன்ற இலுப்பூர் அருகே உள்ள சாங்கிராப்பட்டி கருப்பையா மகன் பொன்னுச்சாமியை (42) மாடு முட்டியதில் தலையில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொன்னுச்சாமி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement