கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகே பத்து லட்ச ரூபாய் பணம் பறிமுதல்

கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகே பத்து லட்ச ரூபாய் பணம் பறிமுதல்

அக்னி டிரேடர்ஸ் என்ற தனியார் நிறுவனம் கேரளாவில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 2500க்கும் மேற்பட்ட லாரிகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கே.கே நகர் போலீசார் வாகன தணிக்கையின் போது காரில் கொண்டு வந்த 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

பின்னர் விசாரித்த போது உரிய ஆவணங்கள் இல்லாததால் கே.கே நகர் காவல் நிலைய போலீசார் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn