திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மனைவியை வெட்டிய கணவர்

திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மனைவியை வெட்டிய கணவர்

திருச்சி ஸ்ரீரங்கம் கண்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (66) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (60) இவரை கடந்த 2007ம் ஆண்டு சுரேஷ் விவாகரத்து செய்துள்ளார்.ராஜேஸ்வரி தற்போது திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அக்கிரஹாரம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சுரேஷ் முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் மனைவிக்கு கொடுத்த காசோலை தொடர்பான வழக்கு தற்போது திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் சொத்து தொடர்பான பிரச்சினையும் இவர்களுக்குள்  இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காசோலை தொடர்பான வழக்குக்காக இன்று திருச்சி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அதன் பின்னர் அங்கிருந்து
அரசு மருத்துவமனை பகுதியில் பேருந்திற்காக ராஜேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த சுரேஷ் அவரை அரிவாளைக் கொண்டு வெட்டி  உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO