செல்போனை கொள்ளையடித்த ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

செல்போனை கொள்ளையடித்த ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த 26.03.22-ந்தேதி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நடந்து சென்ற கறிகடை ஊழியர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை (மதிப்பு ரூ7000/-) பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி ஜாக்கி (எ) பிரசாத் (23) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 27.03.22-ந்தேதி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஜாமியான் பள்ளி அருகில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் செல்போனை (மதிப்பு ரூ.7000/-)
பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின்
சம்மந்தப்பட்ட எதிரி ஜெயசீலன் (19), என்பவரை கைது செய்து நீதிமன்ற 
காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, எதிரிகள் ஜாக்கி (எ) பிரசாத் மற்றும் ஜெயசீலன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் 
ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO