எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டியில் அதிமுக சட்டப்பேரவை தொகுதி சார்பில் வியாழக்கிழமை மாலை மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் பி.வி.கே சி.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக கழக அமைப்பு செயலாளருமான கரூர் எம்.சின்னச்சாமி, முன்னாள் மக்களவை உறுப்பிரும்,

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார், தலைமைக் கழக பேச்சாளர் கே.ஜெயவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மணப்பாறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர், சி.சின்னச்சாமி,

மாவட்ட பொருளாளர் நெட்ஸ் எம்.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.கே.எம்.முகமது இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் என்.சேது, எம்.அன்பரசன், உள்ளிட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினரும், அதிமுக மாவட்ட பிரதிநிதியுமான வேலுமணி, ஊராட்சி மன்ற தலைவர் சோயா ஆறுமுகம் ஆகியோர் வரவேற்புரையும், கிளைச்செயலாளர் வேல்முருகன் நன்றியுரையும் கூறினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn