திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக கார்த்திகேயன் பொறுப்பேற்பு

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக கார்த்திகேயன் பொறுப்பேற்பு

திருச்சி  மத்திய மண்டல காவல்துறை தலைவராக  க. கார்த்திகேயன்,  இன்றைய தினம் (04.01202) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கடத்த ஒன்றரை ஆண்டுகளாகவும் அதற்கு முன்பு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராகவும் மிக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். மேலும் கோவை சரக காவல்துறை துணைத்தலைவராகவும் 2016-ம் ஆண்டில் பணியாற்றியுள்ளார்.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட 2023-ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்ருதல் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார். பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தல், சட்டவிரோதமாக சாராய விற்பளன லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடலயுக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இணையதன் மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குண்டர். தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார். சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் அனிக்க விரும்பும் பொதுமக்கள் வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn