ரயில் மறியல் செய்ய முயன்ற மதிமுக- 75 பேர் கைது

ரயில் மறியல் செய்ய முயன்ற மதிமுக- 75 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதிமுக மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தலைமையிலான மதிமுக வினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துஇன்று திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ரயிலை மறிக்க சென்றனர்.

அப்போது ரயில்வே நுழைவாயில் முன்பு தடுத்து நிறுத்திய கூடுதல் துணை கண்காணிப்பாளர் பால் வண்ண கண்ணன், மணப்பாறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கோபி, ரயில்வே DSP பிரபாகரன் போராட்டக் காரர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு ரயில்வே நிலையம் உள்ளே நுழைய முன்றவற்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின் மதிமுக-வினரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் காவல் துறையினர்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் மதிமுக வினர்க்கு அனுமதி மறுக்கப் பட்ட நிலையில் நுழைவாயில் நின்று கோஷம் எழுப்பினர். பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி திண்டுக்கல்லில் இருந்து ரயிலில் வந்த 1 பெண் உள்பட 3 பேர் மதிமுக கொடி அசைத்து மணப்பாறைக்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர், போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 75 பேர் கைது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn