சாலையில் நடந்து சென்ற நபரிடம் ஒரு லட்சத்தை கொள்ளையடித்த நபர் கைது

சாலையில் நடந்து சென்ற  நபரிடம்   ஒரு லட்சத்தை கொள்ளையடித்த நபர் கைது

கடந்த 05.05..22-ந்தேதி 7.30மணிக்கு TVS Tollgate சர்வீஸ்ரோட்டில் ரூ.1இலட்சம் பணத்துடன் நடந்து சென்ற ஒருவரிடமிருந்து, காரில் வந்த 3 நபர்கள் வழிமறித்து ரூ. 1 இலட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரை பெற்று, கண்டோன்டெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டு,

மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, புலன்விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணையில் வழக்கில் சம்மந்தப்பட்ட இசக்கிராஜா வயது 27,  என்பவரை விசாரணை செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டார். எனவே எதிரி கைது செய்யப்பட்டு, வழக்கு சொத்து கைப்பற்றப்பட்டு, வழக்கின் எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் உதவி ஆணையர் கண்டோன்மென்ட் சரகம் மற்றும் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணிைல் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp


#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO