பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் மாயம்

பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் மாயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (37). இவர் திருப்பூர் காவல் நிலையத்தில் காவலராக இருந்த பொழுது அங்கு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்த யசோதா என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மதியழகன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காவலராக இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததோடு மதுவிற்கு அடிமையாகி உள்ளார். மேலும் இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

அடிக்கடி தனது வீட்டில் இருந்து வெளியில் செல்வதாகவும் அப்படியே சென்று விட்டு ஒரு வாரம், 10 நாள் கழித்து மீண்டும் வருவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் யசோதா கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி வீட்டை விட்டு மதியழகன் வெளியில் சென்று உள்ளார். அப்படி  சென்றவர் வீடு திரும்பவில்லை எங்காவது சென்று இருப்பார் வந்து விடுவார் என அவரது குடும்பத்தார் காத்திருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மதியழகன் வீடு திரும்பாததை தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மதியழகனின் சொந்த ஊரான தர்மபுரி என பல இடங்களில் மதியழகனை யசோதா தேடி உள்ளார். ஆனால் மதியழகன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து யசோதா பெல் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு மதியழகனை பற்றி தகவல் தெரிந்தால் திருவெறும்பூர் டிஎஸ்பி : 94981 00647, பெல் காவல் நிலையம் : 04312520245,

பெல் இன்ஸ்பெக்டர் : 9498158555, பெல் சப் இன்ஸ்பெக்டர் : 9498158517 என்ற மொபைல் மற்றும் தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு பெல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn