ஜில்லா பட ஸ்டைலில் திருச்சியில் அமைச்சர், மகன் பதாகை - வைரல்

ஜில்லா பட ஸ்டைலில் திருச்சியில் அமைச்சர், மகன் பதாகை - வைரல்

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு பிறந்த நாள் நாளை (09.11.2022) திமுகவினர் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளனர். இதற்காக திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநகர் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்து பதாகைகள் வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அடுத்த மாதம் (12.12.2022) அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காகவும் வாழ்த்து பதாகைகள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  

குறிப்பாக திருச்சி தென்னூர் மேம்பாலத்துக்கு கீழ் பிறந்தநாள் வாழ்த்து பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை (09.11.2022) மற்றும் அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாடும் கே.என்.நேரு அவரது மகன் அருண் நேரு வாழ்த்து தெரிவித்து விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஐப்பசியில் பிறந்த நாயகரே, கார்த்திகையில் பிறந்த காவியமே என்ற வசனத்துடன் ஜில்லா படத்தில் நடிகர் விஜய் மோகன்லால் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டு போஸ் கொடுப்பது போல் உள்ள புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கே.என்.நேரும் அவரது மகனும் இருப்பது போல் பதாகையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

எப்பொழுதும் விளம்பர பதாகைக்கும், சுவரொட்டிக்கும் பெயர் போன மதுரையை மிஞ்சும் அளவிற்கு தற்போது திருச்சியில் இது போன்ற பதாகைகள் வைப்பது அதிகரித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO