சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை விபரம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை விபரம்

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை கோவில் மண்டபத்தில் இன்று எண்ணப்பட்டது.

இதில் ரூ. 93 லட்சத்து, 57 ஆயிரத்து 414 ரூபாய் ரொக்கமும், (ஆதி மாரியம்மன் திருக்கோயில் ரூபாய் 7 லட்சத்து 3 ஆயிரத்து 521), (உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில் ரூபாய் 12 ஆயிரத்து 805), (போஜீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 5 ஆயிரத்து 772), 1.990 கிராம் தங்கம், 3 கிலோ 475 கிராம் வெள்ளி, 217 அயல்நாட்டு நோட்டுகள், 1011 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக இருந்தன.

உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்

1. அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன்.

2. இரா.பிரகாஷ், இணைஆணையர் / செயல் அலுவலர்.

3. பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

4. இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

5. சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர்.

6. மு. இரவிச்சந்திரன், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல்.

7. ம.லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி

8. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்.

9. நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்.

10. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.

11. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision