திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் புதிய மின்மாற்றிகளின் செயல்பாடு துவக்கம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் புதிய மின்மாற்றிகளின் செயல்பாடு துவக்கம்

திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நகர்புற வளர்ச்சித் துறை & குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை தொடக்கி வைத்தார். 

இதன் ஒரு பகுதியாக, கருமண்டபம் JRS நகர் பாலம் அருகே நிறுவப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரினை தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சூப்பிரண்டு இஞ்சினியர் இயக்கி வைத்து தொடக்கி வைத்தார். 

மின்வாரியத்தின் சார்பாக, சூப்பிரண்டு இஞ்சினியர், அசிஸ்டன்ட் இஞ்சினியர், உதவி இயக்குநர், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், கருமண்டபம் "வசந்த நகர்-வ.உ.சி. நகர்-காவேரி நகர்-JP நகர்-JRS நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின்" நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பகுதிவாழ் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

JRS நகர் மக்கள் சார்பாக இந்நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது!

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn