மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் இஸ்லாமியர்.

மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் இஸ்லாமியர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது மஸ்தான் (45). இவர் கடைகளுக்கு சாம்பிராணி போடும் தொழில் செய்து வருகிறார். இஸ்லாமியரான இவர் கடந்த 9 ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதமிருந்து சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் 10-வது ஆண்டாக தற்போது, கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலையணிந்து, 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல உள்ளார். தனது வேண்டுதல் நிறைவேறியதால் அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision