துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய தீ பாதுகாப்பு வார விழா.

துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய தீ பாதுகாப்பு வார விழா.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த தீ தடுப்பு வார விழாவிற்கு துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஷிரிஷ்குமார் பாதுகாப்பு மற்றும் சேவையின் கொடியை ஏற்றி வைத்து தீ பாதுகாப்பு வார விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீ பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு தொழிற்சாலை, வீடுகள், பொது இடங்களில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் தங்களையும் தொழிற்சாலைகளையும் பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

மேலும் ஆலை வளாகத்தில் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் தீ தடுப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அறிவுகளை தாங்கள் வளர்த்துக் கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியினார். இதனை தொடர்ந்து தீ விபத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களை எப்படி பத்திரமாக பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision