எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் விழா - அதிமுகவினர் மரியாதை

எம்.ஜி.ஆர் 107 வது  பிறந்தநாள் விழா - அதிமுகவினர் மரியாதை

புரட்சித்தலைவர் 107-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக திருவரம்பூர் அண்ணா தொழிற்சங்கம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார் கலந்து கொண்டு புரட்சிதலைவர், புரட்சித்தலைவி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.

பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.S. ராவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.K.D.கார்த்திக், அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி, பொன்மலை பகுதி கழக செயலாளர் பாலசுப்ரமணியம்,

திருவெறும்பூர் பகுதி கழகச் செயலாளர் பாஸ்கர் (எ) கோபால் ராஜ், கூத்தைபார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் SP.பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் S.P. கணேசன், மாவட்டத் கழக துணை செயலாளர் சுபத்ராதேவி சுப்ரமணி,

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ATP கார்த்திக் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் செயலாளர் KS பாஸ்கர், மாவட்ட கலப்பிரிவுச் செயலாளர் MP.ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் M.சுரேஷ்குமார், திருவெறும்பூர் கழக அவை தலைவர் முருகானந்தம், துவாக்குடி நகரக் கழக துணைச் செயலாளர் கணபதி, முன்னாள் ஊராட்சி செயலாளர் நவல்பட்டு பாலமூர்த்தி,

மலைச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, மீசை ஆறுமுகம், அண்ணாதுரை, அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் பகுதி கழக, நகர, கழக ஒன்றிய, கழக அணி நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision