வட மாநில தொழிலாளர் மர்ம சாவு

வட மாநில தொழிலாளர் மர்ம சாவு

திருச்சியில் பிரபல இனிப்பு கடையின் குடோனில் வேலை பார்த்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர் மர்ம முறையில் இறப்பு - போலீசார் விசாரணை.

திருச்சியில் பி.ஜி நாயுடு ஸ்வீட் ஸ்டால் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இந்நிறுவனத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது.

இந்த குடோனில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் ராய் மகன் தேவேந்திர ராய் (39) என்பவர் மாஸ்டராக கடந்த 15 ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவேந்திர ராய்க்கு மாத ஊதியம் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து அவர் மது அருந்தியுள்ளார். அதிக அளவில் மது அருந்தியதால் உடல் நல கோளாறு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision