காமராஜர் அவர்களின் நினைவு தினம் முன்னிட்டு இன்று அன்னாரது திருவுருவ சிலைக்கு சரவணன் தலைமையில் கொண்டாடப்பட்டது

காமராஜர் அவர்களின் நினைவு தினம் முன்னிட்டு இன்று அன்னாரது திருவுருவ சிலைக்கு  சரவணன் தலைமையில்  கொண்டாடப்பட்டது

காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி மார்க்கெட்டில் நமது தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு தினம் முன்னிட்டு இன்று அன்னாரது திருவுருவ சிலைக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

அது சமயம் திருச்சி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் உள்ள காமராஜர் சிலை அதன் பிறகு காந்தி மார்க்கெட் எதிரில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவு ஸ்தூபி அதன் பின் திருச்சி ஜி ஹெச் அருகில் உள்ள காந்தி மணி மண்டபத்தில் அவரது அஸ்தி உள்ள இடமான நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சேவா தளம் மாவட்ட தலைவர் ஜி முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஜங்ஷன் கோட்டத் தலைவி பிரியங்கா பட்டேல், சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபுதாஹிர், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், அம்ஜத், செந்தில், ஐ என் டி யு சி சம்சுதீன், திருச்சி கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரஃபி, ஈபி ரோடு சண்முகம் ராஜீவ் காந்தி நிர்மல் மார்க்கெட் மாரியப்பன் ஜங்ஷன் கோட்டம் பொருளாளர் பெல்ட் சரவணன் வார்டு தலைவர்கள் கண்ணன் விமல் சூர்யா விஜய் திம்மை செந்தில் குமார் சேவா தல நிர்வாகிகள் ஜிம் விக்கி அப்சர் அரவிந்த் சரவணன் விஜய் ஜெயசூர்யா சேக் சல்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision