திருச்சியில் போட்டி போட்டு வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருச்சியில் போட்டி போட்டு வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே மட்டபாரப்பட்டி ஆற்றுப்பாலத்தில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் கார் ஒன்று வந்துள்ளது.  கார்  இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகமங்கலத்தை சேர்ந்த காதர் உசேன் என்பவர் மீது மோதியுள்ளது. அதில் காதர் உசேன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் பழனிவேல் என்பவர் மீது மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காதர் உசேனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதிவேகமாக காரை ஓட்டி வந்த ஓட்டுனர் காரை அங்கேயே விட்டு தப்பி ஓடியுள்ளார். அவரை ஊர்மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 அவருடைய பெயர் பாலச்சந்திரன் என்பது தெரிய வந்தது. 

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலச்சந்திரனும் மற்றொரு காரும் போட்டிப்போட்டு ஓட்டி வந்துள்ளதாகவும் இதில் பாலச்சந்திரன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்த  இரண்டு இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மணிகண்டம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO