குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அழகர் ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு அக்ரஹாரம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், காவிரி குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள், காலி குடங்களுடன் மணமேடு பவித்திரம் பிரதான சாலையில் அழகரை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தொட்டியம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், அலகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இந்த வாக்குறுதியை ஏற்று மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மணமேடு பவித்திரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision