பெரம்பலூர் வேட்பாளர் சந்திரமோகன், முன்னாள் அமைச்சர்கள் இறுதி கட்ட பிரச்சாரம்.

பெரம்பலூர் வேட்பாளர் சந்திரமோகன், முன்னாள் அமைச்சர்கள் இறுதி கட்ட பிரச்சாரம்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை, திருச்சி சமயபுரம் நான்கு ரோடு எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து துவக்கினார். பின்னர் லால்குடி, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 38 பகுதிகளில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, திருச்சி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி இறுதிக்கட்ட பிரச்சாரத்தை துவக்கினர். அதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித் தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision