தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் "திருச்சியே வாசி" என்னும் நிகழ்வு

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் "திருச்சியே வாசி" என்னும் நிகழ்வு

திருச்சியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா-2022 யை முன்னிட்டு திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவிப்பிற்கிணங்க செப்டம்பர் 16 திருச்சி எழுதப்போகும் வரலாறு என்ற புத்தகம் வாசிப்பது சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான "திருச்சியே வாசி" என்னும் நிகழ்வு நடைபெற்றது.

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் 6ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்கள்  ஆர்வமுடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர்.

எதிர்வரும் செப்டம்பர் 16ம் தேதி புனித ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்க உள்ள புத்தக கண்காட்சி குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO