உலக இருதய தினம் - மாநகராட்சி பணியாளர்களுக்கு இலவச இருதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினம் - மாநகராட்சி பணியாளர்களுக்கு இலவச இருதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் மாருதி மருத்துவமனை இணைந்து மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களுக்குஇலவச இருதய பரிசோதனை முகாம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் இருதய நோய் சிறப்பு மருத்துவர்கள் கொண்டு பரிசோதனைகள் நடைபெற்றதை மேயர் மு.அன்பழகன், ஆணையர் வே.சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்வில் மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா, ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision