நிரந்தர சாலை மற்றும் பாதுகாப்பு கோரி மனு - ஆய்வு

நிரந்தர சாலை மற்றும் பாதுகாப்பு கோரி மனு - ஆய்வு

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்துறை பகுதியில் நிரந்தர சாலை மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்த கோரி தொடர் முயற்சிகள் எடுத்து வரும் முன்னாள் விமானபடை அதிகாரி தங்கராஜ், தமிழக முதலமைச்சர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோவிற்க்கும் மனு அனுப்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலக பொறுப்பாளர் மணவை தமிழ் மாணிக்கம், மனு அளித்த தங்கராஜ் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டறிந்தும், அன்று மதியமே அந்தநல்லுர் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜன் பன்னீர்செல்வத்தை அனுப்பி சம்பந்தபட்ட குறைபாடுகளை நேரில் பார்த்தும் குறைபாடுகளை கேட்டறிய செய்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision