பெட்ரோல் பங்க் பணி பெண் செல்போனை திருடும் டிப்டாப் ஆசாமி

பெட்ரோல் பங்க் பணி பெண் செல்போனை திருடும் டிப்டாப் ஆசாமி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலியம் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்த டிப்டாப் ஆசாமி அவரது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட பங்க் பெண் ஊழியரின் செல்போனை திருடிச் சென்றார். 

பின்னர் செல்போன் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது டிப்டாப் ஆசாமி செல்போன் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்போனை திருடிச் சென்ற டிப்டாப் நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முற்கட்டமாக வண்டி எண்னை வைத்து விசாரணை செய்ததில் டிப்டாப் ஆசாமி திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn