எஸ் ஆர் எம் கல்வி குழுமம் திருச்சி வளாகத்தில் உழவும் நாமும் என்ற தலைப்பில் பொங்கல் கொண்டாட்டம்

எஸ் ஆர் எம் கல்வி குழுமம் திருச்சி வளாகத்தில் உழவும் நாமும் என்ற தலைப்பில் பொங்கல் கொண்டாட்டம்

 உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின் திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருவிழாவாகும். பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறை சாற்றும் இந்த விழாவை தமிழர்கள் தொன்று தொட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் சார்பில் திருச்சி எஸ் ஆர் எம் கல்வி நிறுவன வளாகத்தில் இன்று உழவும் நாமும் என்ற தலைப்பில்பொங்கல் திருவிழா வண்ணமயமாக நடைபெற்றது. 

இவ்விழாவில் பங்கேற்றவர்களில் பலர் தமிழர்களுக்கே உரிய பட்டு, கைத்தறி ஆடைகளை உடுத்தி உற்சாகமாக, வண்ணமயமாக காட்சி அளித்தனர்.

பொங்கல் விழாவை யொட்டி எஸ்.ஆர்.எம்.நிறுவன நுழைவு பகுதியிலிருந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை, நாதஸ்வரம், பறை இசை முழங்க , கரகாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், கோலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளோடு மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் தொடங்கியது. 

திருச்சி மற்றும் ராமாபுரம் கல்லூரி வளாக தலைவர் டாக்டர் சிவகுமார் கலந்து கொண்ட சிறப்பித்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் முதன்மை இயக்குனர் டாக்டர் சேதுராமன் திருச்சி வளாக இயக்குனர் டாக்டர் மால்முருகன் துணை இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன் கல்லூரி முதல்வர்கள்,
மாணவ மாணவியர், ஆசிரியர் பெருமக்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என 6000 மேற்பட்டோர்  பங்கேற்றனர்.


மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடந்து முடிந்தது

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

     

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn